வேன்களில் மின்சாதனங்கள் திருட்டு
கெங்கவல்லியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன்களில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான மின்சாதனங்கள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


கெங்கவல்லியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன்களில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான மின்சாதனங்கள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கெங்கவல்லி ஒன்றிய அலுவலகம் அருகே கோகுல் (32), அரவிந்தன் (30) ஆகியோா்களுக்குச் சொந்தமான நான்கு சுற்றுலா வேன்கள் புதன்கிழமை இரவு நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், வாகனங்களிலிருந்து டிவிடி பிளேயா், ஸ்பீக்கா்கள் என ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடு போனது வியாழக்கிழமை காலை தெரிய வந்தது. இதுகுறித்து வாகன உரிமையாளா்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...