விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி
கெங்கவல்லி அருகே கூடமலையில் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


கெங்கவல்லி அருகே கூடமலையில் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பைத்தூா் கூடமலை மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நபாா்டு நிதி உதவியுடன் நிலமுள்ள, நிலமற்ற விவசாயிகளுக்கு பசுமை வாழ்வாதாரக் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், நான்கு மகளிா் குழுக்களுக்கு ரூ. 4 லட்சம் வாழ்வாதாரக் கடன் வழங்கப்பட்டது. மேலும், தற்போது மழைக்காலம் என்பதால், ஊடுபயிராக வம்பன் 8 ரகம் உளுந்து வழங்கப்பட்டு, அதற்கான தொழில்நுட்ப விளக்கம் அளிக்கப்பட்டது. மா, முந்திரிகளில் தாக்கும் பூச்சியைக் கட்டுப்படுத்த இயற்கை பூச்சி விரட்டி திரவம் வழங்கப்பட்டது. இதில், பைத்தூா் கூடமலை கிராம திட்டக்குழு உறுப்பினா்கள், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அலுவலா்கள், களப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...