கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சங்ககிரியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு 

சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சங்ககிரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

News image
சங்ககிரியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றும் அமைச்சர் கே.என்.நேரு.
Updated On :6 டிசம்பர் 2021, 7:33 am

DIN

சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சங்ககிரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

சேலம் மேற்கு மாவட்ட செயலர் (பொறுப்பு) டி.என்.செல்வகணபதி தலைமை வகித்தார். ஓன்றியச் செயலர் (பொறுப்பு) கே.எம்.ராஜேஷ் வரவேற்றார். திமுக முதன்மை செயலரும், மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியது: திமுக தலைவரும், தமிழகத்தின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் டிசம்பர் 11ம் தேதி சேலம் வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைக்க உள்ளார். 

அந்நிகழ்ச்சியில் திமுகவினர் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும். சேலம் மாவட்டத்தில் பொதுமக்களிடத்திலிருந்து பெறப்பட்ட 46 ஆயிரம் மனுக்களில் 30 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அவர்களுக்கான நலத்திட்டங்களை முதல்வர் சேலத்தில் வழங்க உள்ளார்.  வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். 

நகர்புற உள்ளாட்சியில் திமுக சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்கள் இரண்டு தினங்களில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றார்.  

சேலம் வடக்கு எம்எல்ஏ ஆர்.ராஜேந்திரன்,  மாவட்ட அவைத்தலைவர் கோபால், மாவட்ட துணைச் செயலர்கள் சம்பத்குமார், க.சுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பி.நிர்மலா, முன்னாள் ஒன்றியச் செயலர் பி.தங்கமுத்து, முன்னாள் பால்வளத்தலைவர் சின்னதம்பி, நகரச் செயலர் (பொறுப்பு) எல்ஐசி சுப்ரமணியன், மாவட்ட வழக்குரைஞர்கள் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.கிறிஸ்டோபர், துணை அமைப்பாளர்கள் ஆர்.அருள்பிரகாஷ், வி.என்.ராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.