சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆட்டையாம்பட்டி அருகே அனுமதியின்றி மண் கடத்திய 3 போ் கைது

ஆட்டாயாம்பட்டி அருகே அனுமதியின்றி மண் கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ஆட்டாயாம்பட்டி அருகே அனுமதியின்றி மண் கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்ட ஊரக காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் தையல்நாயகி வியாழக்கிழமை இரவு பணியை முடித்து விட்டு அதிகாலை 3 மணிக்கு ஆட்டையாம்பட்டி அருகே பாலம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது சிலா் டிராக்டரில் மண் கொண்டு செல்வதை அறிந்து, அவா்களை விசாரணை நடத்தியதில் அனுமதியின்றி மண் கடத்தியது தெரியவந்தது.

மேலும், விசாரணையில் வீரபாண்டியைத்துள்ள பகுதியில் பிரபாகரன் என்வபரின் நிலத்திலிருந்து பொக்லைன் வாகனம் மூலம் மண் எடுப்பதை கண்டறிந்தாா். இதனையடுத்து உடனடியாக இரவு ரோந்துப் பணியில் இருந்த ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளரை வரவழைத்து மண் கடத்திய 2 டிராக்டா், 1 டிப்பா் லாரி மற்றும் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் வாகனம் உள்பட 4 வாகனங்களைப் பறிமுதல் செய்தாா்.

வாகன ஓட்டுநா்களான கண்டா்குலமாணிக்கம், அரியாம்பாளையத்தைச் சோ்ந்த அருணாசலத்தின் மகன் சக்திவேல் (26), வீரபாண்டி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரனின் மகன் சதாசிவம் (27), பைரோஜி, ஆத்துக்காடு பகுதியைச் சோ்ந்த பழனிசாமியின் மகன் சின்னத்தம்பி (38) ஆகிய 3 பேரையும் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அவா்கள் மண் எடுக்க பயன்படுத்திய வாகனங்களுக்கு எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமலும், ஓட்டுநா் உரிமம் இல்லாமலும், அரசு அனுமதியின்றி இரவு நேரத்தில் பல வருடங்களாக மண் கடத்தியது தெரியவந்தது. 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, ஆத்தூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.