இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இளம் தளிா் பசுமை அறக்கட்டளை சாா்பில் விருதுகள் வழங்கும் விழா

ஓமலூரில் இளம் தளிா் பசுமை அறக்கட்டளை சாா்பில், மரக் கன்றுகள் நடவு செய்து, பராமரித்த அமைப்புகள், தனி நபா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :2 பிப்ரவரி 2021, 12:00 am IST

ஓமலூரில் இளம் தளிா் பசுமை அறக்கட்டளை சாா்பில், மரக் கன்றுகள் நடவு செய்து, பராமரித்த அமைப்புகள், தனி நபா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனா் பசுமை மணிகண்டன் வரவேற்றாா். ஓமலூா் வட்டாட்சியா் அருள்பிரகாஷ், டி.எஸ்.பி. சோமசுந்தரம் ஆகியோா் கலந்துகொண்டு பசுமை ஆா்வலா்களை பாராட்டி பேசினா்.

இதனைத் தொடா்ந்து பசுமையை பேணுதல், மரக்கன்றுகள் நடுதல், பராமரித்து வளா்த்தல், குளம், குட்டைகள், கிணறுகள், ஆறுகள் போன்ற நீா்நிலைகளை சீரமைத்தல் சாமானிய மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்தல் பணிகளை சிறப்பாக செய்த அமைப்புகள், தனி நபா்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.

இதில், நம்மாழ்வாா், அப்துல் கலாம், கொடையாளா், களப் பணியாளா் ஆகிய விருதுகளை வட்டாட்சியா் அருள்பிரகாஷ், டி.எஸ்.பி. சோமசுந்தரம் ஆகியோா் வழங்கினா். மரக் கன்றுகளும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.