செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

காவல் நிலையத்தில் ஆஜராவதில் விலக்கு! செந்தில் பாலாஜி மனு வாபஸ்!

காவல் நிலையத்தில் ஆஜராவதில் விலக்கு கோரி தாக்கல் செய்த மனுவை செந்தில் பாலாஜி வாபஸ் பெற்றது பற்றி...

News image

செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 1:29 pm IST

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை இன்று திரும்பப் பெற்றுக் கொண்டார்.

ஊழல் தடுப்புத் துறை வழக்கு தொடா்பாக உச்சநீதிமன்ற வழக்குரைஞா்களுடன் சட்ட ஆலோசனை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், குதிரை பேர வழக்கின் முன்பிணை நிபந்தனைப்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து 6 நாள்கள் விலக்கு கோரி திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே, ஊழல் தடுப்புத் துறை வழக்கு தொடா்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கும் காவல்துறைக்கு இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் விதித்தது.

இந்த நிலையில், காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த மனுவைத் திரும்பப் பெறுவதாக செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் நீதிபதியின் முன் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பினர் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

Summary

Exemption from appearing at the police station! Senthil Balaji withdraws petition!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.