எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தம்மம்பட்டி அருகே பால் லாரி கவிழ்ந்தது

தம்மம்பட்டி அருகே தகரப்புதூரில் பால் லாரி விபத்துக்குள்ளானது.

News image
விபத்துக்குள்ளான லாரி.
Updated On :21 பிப்ரவரி 2021, 12:46 pm

DIN

தம்மம்பட்டி அருகே தகரப்புதூரில் பால் லாரி விபத்துக்குள்ளானது.

தம்மம்பட்டியிலிருந்து இலுப்ப நத்தத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான பால் லாரி, தனியார் பால் நிறுவனத்திற்காக தம்மம்பட்டி பகுதியிலிருந்து 9 ஆயிரம் பாலுடன் காரைக்கால் நோக்கிச்செல்ல மாலை 3.45-க்கு தம்மம்பட்டியிலிருந்து புறப்பட்டது. 

Story image

லாரி தம்மம்பட்டி அடுத்த தகரப்புதூரிலுள்ள அனுப்பாறு ஓடை வளைவைக் கடந்த போது, லாரி, கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடது ஓரம் கவிழ்ந்தது. லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் வீரகனூரைச் சேர்ந்த சக்திவேல்(40) என்பவர் மயக்க நிலையில் இருந்துள்ளார். 

Story image

அவரை அக்கம் பக்கத்தினர், முன்புற லாரி கண்ணாடியை உடைத்து மீட்டுள்ளனர். அதன் பின் அவர் தப்பியோடி விட்டார். டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

Story image

மேலும் லாரியில் இருந்த 9 ஆயிரம் லிட்டர் பாலில் சுமார் 4 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே உள்ளதாக நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

Story image

இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.