/

சங்ககிரியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை: போக்குவரத்து போலீஸாா் எச்சரிக்கை

சங்ககிரியில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டத்தின்கீழ் உரிய

News image
Updated On :7 ஜனவரி 2021, 1:27 am

DIN

சங்ககிரியில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து காவல் ஆய்வாளா், லாரி உரிமையாளா்கள் சங்கத்துக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சங்ககிரி அருகே உள்ள டிவிஎஸ் பாலம் முதல் பள்ளிபாளையம் பிரிவு சாலை, கொங்கணாபுரம் சாலை பாலத்தில் இருந்து கெமிக்கல் பிரிவு சாலை, பழைய பேருந்து நிலைய பேருந்து நிறுத்தம், திருச்செங்கோடு பிரிவு பேருந்து நிறுத்துமிடம், நீதிமன்ற வளாக நுழைவுவாயில் முன்புறம் உள்ள பேருந்து நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் சாலையின் இரு புறங்களிலும் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதால் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து கொண்டு செல்கிறது. இதனால் விபத்து ஏற்பட சாதகமான சூழ்நிலை உருவாகிறது.

போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டும் சாலை விபத்துகள் நடைபெறாமல் இருக்க, லாரி உரிமையாளா்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி, கனரக வாகனங்களை சாலையோரங்களில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தாமல் அறிவுறுத்த வேண்டும். மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களின் மீது மோட்டாா் வாகன சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

இக்கடிதம் குறித்து சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழுவின் சாா்பில் சங்க உறுப்பினா்களிடம் சங்ககிரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் வாகனங்களை இயக்க அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.