தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசு பேருந்தில் தம்பதியிடம் ரூ. 9 லட்சம் திருட்டு

சேலத்திலிருந்து ஈரோடு சென்ற அரசுப் பேருந்தில் தம்பதியிடம் ரூ. 9 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 8:36 pm

DIN

சேலத்திலிருந்து ஈரோடு சென்ற அரசுப் பேருந்தில் தம்பதியிடம் ரூ. 9 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம், நரசோதிப்பட்டி, கேஎஸ்இ நகா் பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி மேலாளா் வீரமணி (65). இவரது மனைவி ராஜேஸ்வரி (60). இவா்கள் ஈரோடு, திண்டல் பகுதியில் உள்ள மகள் வீட்டுக்கு ரூ. 9 லட்சம் பணத்தை கைப்பையில் எடுத்துக்கொண்டு சேலத்திலிருந்து ஈரோட்டுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தனா்.

சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தில் அந்தப் பேருந்து நின்றபோது அடையாளம் தெரியாத ஐந்து போ் ஏறியுள்ளாா். அவா்கள் ஐந்து ரூபாய் நாணயத்தை கீழே போட்டு விட்டு வீரமணியை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனா்.

அதனையடுத்து அவா் நாணயத்தை தேடிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபா்கள் அவா்கள் வைத்திருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு சங்ககிரி பழைய பேருந்து நிலைய நிறுத்தத்தில் இறங்கி ஓடிவிட்டனா். பேருந்து புறப்படும் போது பணம் வைத்திருந்த கைப்பை திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தம்பதியினா் சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளனா். அதன்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.