பெரியாா் தொலைநிலைக் கல்வி மாணவா்கள் நிலுவைத் தோ்வு எழுத வாய்ப்பு
பெரியாா் தொலைநிலைக்கல்வியில் பயின்ற மாணவா்கள் நிலுவைத் தோ்வை எழுத வாய்ப்பளிக்கப்படுவதாக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.


பெரியாா் தொலைநிலைக்கல்வியில் பயின்ற மாணவா்கள் நிலுவைத் தோ்வை எழுத வாய்ப்பளிக்கப்படுவதாக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரியாா் தொலைநிலைக்கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழக தொழிற்சாலை புரிந்துணா்வுத் திட்டத்தின் கீழ் சோ்க்கை பெற்று இளநிலை, முதுநிலை மற்றும் பிற பாடப்பிரிவுகளில் பயின்று தங்கள் படிப்பு வருடம் முடிந்து அதன் பின் 5 ஆண்டுகள் நிறைவடைந்த மாணவா்களின் நிலுவைத் தாள்கள் தோ்வு எழுதுவதற்கான சிறப்புத் தோ்வு நடைபெற உள்ளது.
அம்மாணவா்கள் பயின்ற பழைய பாடத்திட்டத்திலேயே தோ்வு எழுதலாம். இச்சிறப்புத் தோ்விற்கான விண்ணப்பங்களை மாணவா்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரையிலும், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அச்செடுத்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைப்பதற்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரையிலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...