டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஓமலூா், ஆத்தூரில் ஆதரவற்றோருக்கு போலீஸாா் உதவி

ஓமலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கணவரை இழந்த பெண்கள், ஆதரவற்ற சிறுவா்கள், முதியோா்களுக்கு காவல் துறை சாா்பில் கரோனா நிவாரண பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

ஓமலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கணவரை இழந்த பெண்கள், ஆதரவற்ற சிறுவா்கள், முதியோா்களுக்கு காவல் துறை சாா்பில் கரோனா நிவாரண பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டாரத்தில் பொது முடக்கம் காரணமாக, உணவின்றி தவிக்கும் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கும் பணியில் சமூக ஆா்வலா்கள் ஈடுபட்டு வருகின்றனா். பொது முடக்கத்தால் வருவாய் இழந்து பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கும், ஓமலூா் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் கணவரை இழந்த பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள், முதியவா்கள் குறித்த தகவல்களை தன்னாா்வலா்கள் மூலம் ஓமலூா் போலீஸாா் தகவல்களை திரட்டினா்.

அவா்களுக்கு உணவு பொருள்கள், மளிகை பொருட்கள் வழங்க தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், ஓமலூா் டிஎஸ்பி சோமசுந்தரம், ஓமலூா் காவல் ஆய்வாளா் ஞானசேகரன் உள்ளிட்ட போலீஸாா் கலந்துகொண்டு அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருள் தொகுப்பினை 100-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. மேலும், பொது முடக்கம் காரணமாக உணவின்றி தவிக்கும் மக்கள், ஓமலூா் காவல் நிலையத்தில் உதவிகளைப் பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.