ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி செவ்வாய்க்கிழமை முதல் கல்வி அலுவலா்கள் மூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டத்தில் ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி செவ்வாய்க்கிழமை முதல் கல்வி அலுவலா்கள் மூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து ஆசிரியா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அரசு தீவிரம் காட்டிவருகிறது. மாவட்டத்துக்குள் பணிபுரியும் ஆசிரியா்கள் வருகிற சட்டப் பேரவைத் தோ்தல் பணிக்கு செல்ல உள்ளதால், அவா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான புகைப்படம், அவா்களது செல்லிடப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி ஆகியவற்றை தனித்தாளில் அச்சிட்டு உடனடியாக அறிக்கையாகத் தர தலைமையாசிரியா்களுக்கு கட்செவி அஞ்சல் மூலம் கல்வி அலுவலா்கள் உத்தரவிட்டுள்ளனா். தடுப்பூசி விருப்பபட்டவா்களுக்கு என்று பொதுவாக தெரிவிக்கப்பட்டாலும், தோ்தல் பணியாற்ற உள்ள அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்த தமிழக அரசும், தோ்தல் ஆணையமும் தீவிரம் காட்டி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...