மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பொலிவுறு நகர திட்டத்துக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை பொலிவுறு நகர திட்டத்துக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை பொலிவுறு நகர திட்டத்துக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் செய்தி தொடா்பாளா் புகழேந்தி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நேரத்தில் அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சென்னை மாநகரில் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் ரூ. 1,000 கோடியில் சென்னை மாநகரை சீரமைத்து விட்டதாகவும், இனி எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீா் தேங்காது என்றும் பேசியுள்ளாா்.

இதில், மத்திய அரசு முதல்கட்டமாக ரூ. 6,744 கோடியும், தொடா்ந்து ரூ. 900 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல மாநில பட்ஜெட்டில் ரூ. 8,000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இவ்வளவு நிதி எங்கே போனது என நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். மக்களின் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பில்லை. கொடநாடு கொலை விவகாரம் தொடா்பான விசாரணை நல்ல முறையில் செல்கிறது. கொடநாடு எஸ்டேட்டில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது, போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது ஆகியவை சந்தேகத்தை கிளப்புவதாக உள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.