கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வனவாசி பேரூராட்சியில் வீடு வீடாகச் சென்று முதியவர், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி

வனவாசி பேரூராட்சியில் வீடு வீடாகச் சென்று முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
வனவாசி பேரூராட்சியில் வீடு வீடாகச் சென்று முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Updated On :10 அக்டோபர் 2021, 11:40 am

DIN

வனவாசி பேரூராட்சியில் வீடு வீடாகச் சென்று முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சேலம் மாவட்டம், வனவாசி பேரூராட்சி பகுதியில் 6635 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் விவசாயிகளும் நெசவாளர்களும் அதிகம் உள்ளனர். பேரூராட்சி என்றாலும் கிராமம் போலவே இப்பகுதி உள்ளது. கரோனா தடுப்பூசி மையங்கள் அமைத்தாலும் சிலர் அச்சம் காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் வீடுகளிலேயே முடங்கி கிடகக்கின்றனர். இதேபோல் வாகன வசதி இல்லாத காரணத்தாலும் சிலர் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. 

இதேபோல் மாற்றுத் திறனாளிகள் முகாம்களுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வனவாசி பேரூராட்சி செயல் அலுவலர் ந.கோபிராஜா வனவாசி ஆரம்பசுகாதார நிலைய மருத்துவர் இந்திராணி மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி மருந்துகளுடன் வீடு வீடாகச் சென்று முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்தினார்கள். 

அச்சத்தின் காரணமாக தடுப்பூசி போடாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களாக தடுப்பூசி போட்டுக்கொள்ள சம்மதம் தெரிவித்த பின்னர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று பேரூராட்சி குதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெறும் முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இயல்வாகை, வேங்கை, மஞ்சள்கடம்பை, மகாகணிவகை மரக்கன்றுகள் பேரூராட்சி சார்பில் வழங்கப்பட்டன. 

Story image

மரகன்றுகள் பெற்றவர்களின் பெயர் முகவரி மற்றும் தொலை பேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுகின்றன. பின்னர் மரக்கன்றுகள் வளரும் வரை கண்காணிக்கப்படும் என்றும் வனவாசி பேரூராட்சி பகுதியில் 5 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் வனவாசி பேரூராட்சி செயல் அலுவலர் ந.கோபிராஜா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.