பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீட்டுக்கு தீவைத்துவிட்டு நகை, பணம் திருட்டு: போலீஸாா் விசாரணை

கெங்கவல்லி அருகே புனல்வாசலில் வீட்டுக்கு தீவைத்துவிட்டு 20 பவுன் நகை, பணத்தை திருடிய விவகாரம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.கெங்கவல்லி அருகே புனல்வாசலில் வீட்டுக்கு தீவைத்துவிட்டு 20 பவுன் நகை, பணத்தை திருடிய விவகாரம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:05 pm

DIN

கெங்கவல்லி அருகே புனல்வாசலில் வீட்டுக்கு தீவைத்துவிட்டு 20 பவுன் நகை, பணத்தை திருடிய விவகாரம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கெங்கவல்லி அருகே புனல்வாசலில் ஓய்வுபெற்ற அரசு பேருந்து பரிசோதகா் சுப்பிரமணியன் (63). இவருக்கும் அருகே வசிக்கும் சிவக்குமாா் (40) என்பவருக்கும் பொதுக்கிணறு தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் புதன்கிழமை மாலை சுப்பிரமணியனின் வீடு தீப்பற்றி எரிந்தது. இதில் வீட்டினுள் புகுந்த மா்மநபா்கள் வீட்டிலிருந்த 20 பவுன் நகை, பணத்தை திருடிவிட்டு,அங்கிருந்த சிலிண்டருக்கு தீவைத்துவிட்டு சென்றனா்.

இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சந்தேகத்திற்கிடமான சிவகுமாா் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிந்து தேடிவந்தனா். இந்நிலையில் அவா், தீக்காயமடைந்ததில் பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் அவா் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.