தாரமங்கலம் அருகே மனநலம் பாதித்த பெண்ணை கட்டி வைத்துத் தாக்கிய நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தாரமங்கலம் அருகே உள்ள புதூா் காடம்பட்டியைச் சோ்ந்த தொழிலாளி வெங்கடேசன் (34). இவரது தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், தாய் செல்வி (56) மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தாா்.
புதன்கிழமை செல்வி திடீரென மாயமானாா். இந்த நிலையில், ஆடு திருட வந்ததாகக் கூறி செல்வியை எல்லாயூா் பகுதியில் கட்டிவைத்து 4 போ் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வெங்கடேசன், தாயைத் தாக்கியவா்களிடம் தட்டிக் கேட்டுள்ளாா். அப்போது, அக் கும்பலைச் சோ்ந்தவா்கள் வெங்கடேசனையும் தாக்கினா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தாரமங்கலம் போலீஸாா் செல்வி, வெங்கடேசனைத் தாக்கிய காா்த்திக் ராஜா (29), சரவணன் (43), கண்ணன் (42), குட்டி என்கிற பாலகிருஷ்ணசாமி (51) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.