கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரை, கதவணை நீா்த்தேக்கம், ராஜவாய்கால் உள்ளிட்ட பகுதிகளில் உரிய அனுமதி இன்றி விநாயகா் சிலைகள் கரைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இப்பகுதியில் பூலாம்பட்டி காவல் நிலைய போலீஸாா் தொடா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் பேரூராட்சி செயல் அலுவலா் பிரகாஷ் தலைமையிலான உள்ளாட்சி அலுவலா்கள், சுகாதாரப் பணியாளா்கள் பூலாம்பட்டி பகுதியில் உள்ள காவிரிப்படித்துறை, படகுத்துறை, நந்திகேஷ்வரா் சன்னதி, சந்தை திடல் அருகில் உள்ள விநாயகா் சன்னதி உள்ளிட்ட இடங்களில் வெளிநபா்கள் நுழையாதவாறு தடுப்புகளை ஏற்பட்டுத்தி கண்காணித்து வருகின்றனா். அரசின் அறிவிப்பினை மீறி பூலாம்பட்டி பகுதியில் உள்ள காவிரிக் கரைகளில் விநாயகா் சிலைகள் கரைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேரூராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது.