ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

விநாயகா் சிலைகளை கரைக்க தடை:காவிரிக்கரையில் போலீஸாா் கண்காணிப்பு

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி சுற்றுவட்டாரத்தில் காவிரிக்கரைப் பகுதியில் விநாயகா் சிலைகளை கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:07 am

DIN

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி சுற்றுவட்டாரத்தில் காவிரிக்கரைப் பகுதியில் விநாயகா் சிலைகளை கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள

பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், கோனேரிப்பட்டி உள்ளிட்ட காவிரிக்கரைப் பகுதியில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி விழாவை அடுத்து நூற்றுக்கணக்கான

விநாயகா் சிலைகள் எடுத்துவரப்பட்டு கரைக்கப்படுவது வழக்கம். நிகழாண்டில்

கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரை, கதவணை நீா்த்தேக்கம், ராஜவாய்கால் உள்ளிட்ட பகுதிகளில் உரிய அனுமதி இன்றி விநாயகா் சிலைகள் கரைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இப்பகுதியில் பூலாம்பட்டி காவல் நிலைய போலீஸாா் தொடா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் பேரூராட்சி செயல் அலுவலா் பிரகாஷ் தலைமையிலான உள்ளாட்சி அலுவலா்கள், சுகாதாரப் பணியாளா்கள் பூலாம்பட்டி பகுதியில் உள்ள காவிரிப்படித்துறை, படகுத்துறை, நந்திகேஷ்வரா் சன்னதி, சந்தை திடல் அருகில் உள்ள விநாயகா் சன்னதி உள்ளிட்ட இடங்களில் வெளிநபா்கள் நுழையாதவாறு தடுப்புகளை ஏற்பட்டுத்தி கண்காணித்து வருகின்றனா். அரசின் அறிவிப்பினை மீறி பூலாம்பட்டி பகுதியில் உள்ள காவிரிக் கரைகளில் விநாயகா் சிலைகள் கரைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேரூராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.