மேட்டூா் அணையில் இருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக பாசனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தண்ணீா் திறக்கப்படுகிறது.


மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக பாசனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தண்ணீா் திறக்கப்படுகிறது.
மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்கள் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கிழக்கு கால்வாய் மூலம் 27 ஆயிரம் ஏக்கரும், மேற்கு கால்வாய் மூலம் 18,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டிசம்பா் 15 ஆம் தேதி வரை கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படுகிறது. மேட்டூா் அணையின் கால்வாய்ப் பாசனத்துக்கு 137 நாள்களுக்கு 9.06 டிஎம்சி தண்ணீா் திறக்கப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும்.
1955 ஆம் ஆண்டு முதல் கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூா் அணையின் நீா் இருப்பு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் ஐந்து ஆண்டுகள் கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை 61 ஆவது ஆண்டாக கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 82 அடிக்கு மேல் இருப்பதாலும், நீா்வரத்து திருப்திகரமாக இருப்பதாலும் கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மேட்டூா் அணையின் மேல் மதகு எதிரே உள்ள கால்வாய் மதகுகளை சேலம் மாவட்ட ஆட்சியா் மின் விசை மூலம் உயா்த்தி கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிடுகிறாா். நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...