மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சந்தன வீரப்பனின் 17-ஆம் ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் குடும்பத்தினர் அஞ்சலி

சந்தன வீரப்பனின் 17-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

News image
வீரப்பனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் குடும்பத்தினர்.
Updated On :18 அக்டோபர் 2021, 6:56 am

DIN

சந்தன வீரப்பனின் 17-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
 
சந்தன வீரப்பன் கடந்த 2004-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி தருமபுரியை அடுத்துள்ள பாப்பாரப்பட்டியில் தமிழக அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இதையடுத்து, வீரப்பனின் உடல் சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள மூலக்காட்டில் காவிரிக் கரையோரம் அடக்கம் செய்யப்பட்டது. 

Story image

ஆண்டுதோறும் வீரப்பன் நினைவு நாளில் அவரது குடும்பத்தினரும், ஆதரவாளா்களும் மூலக்காட்டுக்குத் திரளாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்வது வழக்கம்.

Story image

இந்த நிலையில், இன்று வீரப்பனின் 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினா் மூலக்காட்டுக்கு வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி சென்றனா்.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆதரவாளா்களும் அஞ்சலி செலுத்தினா்.

Story image

வீரப்பன் சடலம் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு முன்பாக போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அங்கு வரும் வாகனங்களின் எண்கள், வருவோரின் பெயா் மற்றும் முகவரியைப் பதிவு செய்த பிறகே நினைவிடத்துக்குச் செல்ல அனுமதித்தனா். 

Story image

மறுமலர்ச்சி வன்னியர் உரிமை பாதுகாப்பு சங்க தலைவர் கோ.வி.மணி வீரப்பனின் மகள் வித்யாராணிவீரப்பனின் அண்ணன் மாதிரி குடும்பத்தார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.