மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

தம்மம்பட்டியில் டெங்கு அறிகுறி: மருத்துவக் குழுவினர் முகாம்

தம்மம்பட்டியில் சிறுவனுக்கு டெங்கு அறிகுறி உறுதியானதையடுத்து, அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டனர்.

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 0:45 pm IST

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் சிறுவனுக்கு டெங்கு அறிகுறி உறுதியானதையடுத்து, அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பர் தெரு, ஏரப்பன் சந்தில் 11 வயதுள்ள சிறுவனுக்கு தொடர் காய்ச்சல் இருந்ததையடுத்து, சேலம் தனியார் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். 

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுவனுக்கு டெங்கு அறிகுறி உறுதியானது. இதுகுறித்து, சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் ஜெமினி உத்தரவின் பேரில், வட்டார தலைமை மருத்துவர் வேலுமணி மேற்பார்வையில், மருத்துவர் வனிதா தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஜமால், தினேஷ், சுந்தரராஜன், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அடங்கிய நடமாடும் மருத்துவக்குழுவினர், குரும்பர் தெருவில் முகாமிட்டு, வீடுவீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனையும், கொசு ஒழிப்பிற்கான பணிகளில் ஈடுபட்டு டெங்கு காய்ச்சல் தடுப்புக்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.