புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தம்மம்பட்டியில் டெங்கு அறிகுறி: மருத்துவக் குழுவினர் முகாம்

தம்மம்பட்டியில் சிறுவனுக்கு டெங்கு அறிகுறி உறுதியானதையடுத்து, அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டனர்.

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 7:15 am

DIN

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் சிறுவனுக்கு டெங்கு அறிகுறி உறுதியானதையடுத்து, அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பர் தெரு, ஏரப்பன் சந்தில் 11 வயதுள்ள சிறுவனுக்கு தொடர் காய்ச்சல் இருந்ததையடுத்து, சேலம் தனியார் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். 

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுவனுக்கு டெங்கு அறிகுறி உறுதியானது. இதுகுறித்து, சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் ஜெமினி உத்தரவின் பேரில், வட்டார தலைமை மருத்துவர் வேலுமணி மேற்பார்வையில், மருத்துவர் வனிதா தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஜமால், தினேஷ், சுந்தரராஜன், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அடங்கிய நடமாடும் மருத்துவக்குழுவினர், குரும்பர் தெருவில் முகாமிட்டு, வீடுவீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனையும், கொசு ஒழிப்பிற்கான பணிகளில் ஈடுபட்டு டெங்கு காய்ச்சல் தடுப்புக்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.