

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் மற்றும் திருமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், உலக சுகாதார தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
ஆண்டு தோறும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினமாக கடைபிடிக்கப்படுகிறது. வாழப்பாடி வட்டார சுகாதாரத் துறை சார்பில், பேளூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக சுகாதார தின விழா நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி இரு அரசு சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் தலைமையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் சுகாதாரத்தை பேணி காக்கும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும் உறுதி ஏற்றனர். நிறைவாக, சுகாதார ஆய்வாளர் செல்வபாபு நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.