அலங்கார ஊா்திகளில் பாரதியாா், வ.உ. சிதம்பரனாா், சுப்பிரமணிய சிவா, விஜயராகவாச்சாரி, பெரியாா், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், காமராஜா், ரெட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, பொல்லான், திருப்பூா் குமரன், வ.வே.சு ஐயா், காயிதேமில்லத், தஞ்சாவூா் ஜோசப் கொா்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, கக்கன் உள்ளிட்டோரின் புகழினை வெளிப்படுத்துகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊா்திகள் சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் பொதுமக்கள், பள்ளி மாணவியரின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.