ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

உலக தண்ணீர் தினம்: பேருந்து பயணிகளுக்காக இரு குடிநீர் தொட்டிகள் அமைப்பு 

 உலக தண்ணீர் தினத்தினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை, பசுமை சங்ககிரி,

News image
Updated On :22 மார்ச் 2022, 9:28 am

சங்ககிரி:  உலக தண்ணீர் தினத்தினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை, பசுமை சங்ககிரி, ஓம்ராம் யோகா அறக்கட்டளையின் சார்பில் பேருந்து பயணிகள் குடிநீர் அருந்துவதற்காக இரு குடிநீர் தொட்டிகளை செவ்வாய்க்கிழமை அமைத்தனர். அத்தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சங்ககிரி பேரூராட்சித்தலைவர் தொடக்கி வைத்தார். 

சங்ககிரியில் கடந்த சில வாரங்களாக வெப்பம் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து சங்ககிரி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பேருந்து பயணிகள் வெயிலில் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சேலம் பேருந்து நிறுத்தம், வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் பகுதிகளில் தற்காலிக பந்தல் அமைத்தனர்.  

அப்பந்தலில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் குடிநீருக்காக பல இடங்களை தேடி சென்று வந்ததையடுத்து உலக தண்ணீர் தினத்தினையொட்டி சங்ககிரி தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை, பசுமை சங்ககிரி, ஓம்ராம் யோகா அறக்கட்டளைகளின் சார்பில் இரு இடங்களிலும் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டன. அக்குடிநீர் தொட்டிகளை பேரூராட்சித்தலைவர் மணிமொழிமுருகன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடக்கி வைத்து பொதுமக்களுக்கு குடிநீரை வழங்கினார்.  

சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பி.தங்கமுத்து, பேரூராட்சி துணைத்தலைவர் அருண்பிரபு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் கே.எம்.முருகன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக இணைச் செயலர் செல்வராஜ், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை தலைவர் மற்றும் 9வது வார்டு பேரூராட்சி உறுப்பினர் கி.சண்முகம், நிர்வாகிகள் பொன்.பழனியப்பன், வழக்குரைஞர் மணிசங்கர், ராமசாமி, கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணன், செந்தில்குமார், சீனிவாசன், கிஷோர், பசுமை சங்ககிரி அமைப்பின் தலைவர் மரம் பழனிசாமி, பசுமை சீனிவாசன், பசுமை கனகராஜ், காந்தி, ஓம்ராம் யோகா அறக்கட்டளைத் தலைவர் பி.சுந்தரவடிவேல் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.