ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சித்திரைத் தேர் திருவிழா நிறைவு: சங்ககிரி மலைக்கு திரும்பினார் சென்னகேசவப் பெருமாள் 

சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தேர் திருவிழா நிறைவு பெற்று சுவாமி செவ்வாய்க்கிழமை திருமலைக்கு திரும்பினார். 

News image
சித்திரைத் தேர் திருவிழா நிறைவுபெற்று அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமிகளுடன் செவ்வாய்க்கிழமை திருமலைக்கு செல்கிறார். 
Updated On :24 மே 2022, 6:09 am

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தேர் திருவிழா நிறைவு பெற்று சுவாமி செவ்வாய்க்கிழமை திருமலைக்கு திரும்பினார். 

சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தேர் திருவிழாவினையொட்டி மே 6-ம் தேதி உற்சவமூர்த்தி சுவாமிகள் திருமலையிலிருந்து நகருக்கு எழுந்தருளினர். அதனையடுத்து சுவாமிகள் தினசரி பல்வேறு வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தனர்.  

சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி

சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி

மே 14-ம் தேதி சுவாமிகள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றன.  பின்னர் பல்வேறு மண்டப கட்டளை வழிபாட்டிற்கு பின்னர் சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. அதனையடுத்து  சுவாமிகள் தங்கு மண்டபத்திலிருந்து நான்கு ரத வீதிகளின் வழியாக மலைக்கு திரும்பினார். 

முன்னதாக ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி செல்ல அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர்  ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள் சென்றனர். பக்தர்கள் வழியெங்கும் தேங்காய், பழங்கள், நாட்டுச்சர்க்கரையுடன் கூடிய பொட்டுக்கடலை ஆகியவைகளை படைத்து சுவாமிகளை வழிப்பட்டனர். மலையடிவாரம் பகுதியில் பக்தர்கள் மலைக்கு செல்பவர்களுக்கு  அன்னதானம், குடிநீர் பாக்கெட்டுகளை வழங்கினர். 

சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள். 

சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள். 

மலையடிவராத்தில் 2-வது மண்டபத்தில் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் தேங்காய்களை தரையில் உடைத்து கோவிந்தா, கோவிந்தா என்று முழங்கியவாறு சுவாமிகளை வழியனுப்பி வைத்தனர். பக்தர்கள் அதிகளவில் சுவாமிகளுடன் மலை ஏறினர்.  

மலை மீது இன்றிரவு வன்னிய குல சத்திரியர்கள் அமைப்பின் சார்பில் சுவாமிகளுக்கு குறிச்சி அலங்காரம் வாணவெடிகளுடன் நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.