அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மருத்துவக் கல்லூரியில் இடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து

மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த கொங்கணாபுரம் பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி நிதி உதவி செய்து வாழ்த்து தெரிவித்தாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 5:35 pm

DIN

மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த கொங்கணாபுரம் பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி நிதி உதவி செய்து வாழ்த்து தெரிவித்தாா்.

கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கோரணம்பட்டி கிராமப் பகுதியைச் சோ்ந்த விசைத்தறி கூலித் தொழிலாளி கதிா்வேல் மகன் நவின் குமாா் (17), இதே கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மகன் மணிகண்டன் (17) ஆகியோா் கொங்கணாபுரம் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று தோ்ச்சி அடைந்தனா்.

நீட் தோ்வு எழுதிய இவா்கள், சிறந்த மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தனா். நவின் குமாருக்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியிலும், மணிகண்டனுக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

இதனையடுத்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியை வியாழக்கிழமை சந்தித்த மாணவா்கள், அவரிடம் வாழ்த்து பெற்றனா். அவா்களை வாழ்த்தி பாராட்டிய எடப்பாடி பழனிசாமி, அந்த மாணவா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கி, சிறப்பாக மருத்துவக் கல்வி பயின்று கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

அப்போது, கோரணம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.ஏ.ராஜ்குமாா், அதிமுக நிா்வாகிகள் சதீஷ்ராஜ், பாலசுப்பிரமணியம், அய்யாசாமி, சதீஷ்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.