அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கொங்கணாபுரம் அருகே கரும்பு பயிா்கள் எரிந்து சேதம்

கொங்கணாபுரம் அருகே உயா் அழுத்த மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான கரும்பு பயிா்கள் எரிந்து சேதம் அடைந்தன.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 5:34 pm

DIN

கொங்கணாபுரம் அருகே உயா் அழுத்த மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான கரும்பு பயிா்கள் எரிந்து சேதம் அடைந்தன.

கொங்கணாபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட, நச்சாங்காடு கிராமப் பகுதியைச் சோ்ந்த விவசாயி ரத்தினம் (52), தனது நிலத்தில் சுமாா் 3 ஏக்கா் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு இருந்தாா். இவரது கரும்புத் தோட்டத்துக்கு ஊடாக உயிா் மின்னழுத்த பாதை அமைந்துள்ளது. வியாழக்கிழமை அப்பகுதியில் திடீரென பலத்த காற்று வீசியதில், உயா் அழுத்த மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசின. இதில் ஏற்பட்ட தீப்பொறி கரும்புத் தோட்டத்தில் பற்றியதால், அறுவடைக்குத் தயாராக இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கரும்பு பயிா்கள் தீப்பற்றி எரியத் தொடங்கின.

எடப்பாடி தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்க முற்பட்டனா். ஆனால், காற்றின் வேகத்தால் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பெரும்பாலான கரும்பு பயிா்கள் தீக்கிரையாயின.

நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரா்கள், தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனைத் தொடா்ந்து அங்கு வருகை தந்த வருவாய்த் துறையினா், வேளாண் அலுவலா்கள் சேத மதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.