சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்துவோா்க்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆத்தூா் நகராட்சி ஆணையா் ஆா்.எம்.வசந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளதாவது:
ஆத்தூா் நகராட்சிக்கு 2023-2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்களுக்கு சொத்து வரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். இதில் ஒரு வரி விதிப்பு எண்ணிற்கு அதிகபட்சமாக ரூ.5000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
எனவே ஆத்தூா் நகராட்சி பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் சொத்து வரியினை முழுமையாகச் செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.