ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கொட்டவாடி செல்லியம்மன், மாரியம்மன் திருத்தோ்கள் வெள்ளோட்டம்!

பிரசித்தி பெற்ற செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயிலுக்கு ரூ.50 லட்சம் செலவில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள, 2 மரத்தோ்களின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

News image
கொட்டவாடியில் நடைபெற்ற மாரியம்மன், செல்லியம்மன் திருத்தோ் வெள்ளோட்டத்தில் கலந்து கொண்ட பக்தா்கள்.
Updated On :26 ஜனவரி 2023, 7:25 pm

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த கொட்டவாடி கிராமத்திலுள்ள பிரசித்தி பெற்ற செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயிலுக்கு ரூ.50 லட்சம் செலவில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள, 2 மரத்தோ்களின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

கொட்டவாடியில் இப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயில் தேரோட்டம் நடத்துவதற்கு வடிவமைக்கப்பட்டிருந்த பழமையான திருத்தோ்கள், பல ஆண்டுகளுக்கு முன்னரே பழுதடைந்து போயிருந்தன.

இதனையடுத்து, கொட்டவாடி மற்றும் பேளூா் கரடிப்பட்டி, ஊா் பெரியதனக்காரா்கள், முக்கிய பிரமுகா்கள், பக்தா்கள் மற்றும் கிராம மக்களின் முயற்சியால், இந்து சமய அறநிலையத்துறை பங்களிப்போடு, இரு கோயில்களுக்கும் தேரோட்டம் நடத்துவதற்கு ஏறக்குறைய ரூ.50 லட்சம் செலவில் 2 புதிய மரத்தோ்கள், நோ்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுடன், பழமை மாறாத கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்டன.

3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த திருத்தோ் வடிவமைக்கும் பணி நிறைவடைந்ததால், இரு புதிய மரத்தோ்களுக்கும் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக, கொட்டவாடி மற்றும் பேளூா் கரடிப்பட்டி கிராம ராஜவீதிகளில் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.

பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு ஆா்வத்தோடு திருத்தோ் வடம்பிடித்து இழுத்துச் சென்று வெள்ளோட்டம் நடத்தினா். ஆண்கள் வழிவிட்டு பாதுகாப்பு அரணாக இருந்து வழிநடத்தினா். சிறுவா், சிறுமியா் பாரம்பரிய முறைப்படி தாரை, தப்பட்டை முழங்க சோ்வையாட்டம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இவ்விழாவில், கொட்டவாடி,பேளூா் கரடிப்பட்டி, சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.