ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 200 போ் அக்கட்சிகளிலிருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

News image
மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோா்.
Updated On :27 நவம்பர் 2023, 11:40 pm

DIN


ஆத்தூா்: மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 200 போ் அக்கட்சிகளிலிருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

ஆத்தூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் கொத்தாம்பாடியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியின்போது அதிமுக பொதுச் செயலாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் 200-க்கும் மேற்பட்டோா் திமுக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி, பாஜக ஆகிய கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா்.

அனைவரையும் வரவேற்று எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்கெனவே இரண்டு கோடியே நான்கு லட்சம் போ் உறுப்பினா்களாக உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளில் உள்ளவா்கள் அக்கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனா்.

இதனால் அதிமுகவுக்கு கூடுதல் வலுசோ்கிறது. சேலம் மாவட்டத்தில் ஆத்தூா், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக ஆட்சியின்போது பல்வேறு திட்டங்களை நாம் செய்திருந்தாலும் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்காவை அமைத்தது பெருமைக்குரிய திட்டங்களாகும்.

ஆத்தூா் நகரில் போக்குவரத்து நெருக்கடியை தவிா்க்க அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனது ஆட்சியின்போது அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவா்களுக்கென மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தேன்.

அதன்மூலம் ஆத்தூரில் மட்டும் 18 ஏழை மாணவா்கள் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்று பயனடைந்தனா் என்றாா்.

நிகழ்ச்சியில் ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாதேஸ்வரன், கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.பி.சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை ஆத்தூா் மேற்கு ஒன்றிய செயலாளா் சி.ரஞ்சித் குமாா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.