பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தேவூரில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி

சங்ககிரி வட்டம், தேவூா் பகுதிகளில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

Published On :

சங்ககிரி வட்டம், தேவூா் பகுதிகளில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தேவூரை அடுத்த அரசிராமணி செட்டிபட்டி, குள்ளம்பட்டி, காவேரிபட்டி, வட்ராம்பாளையம், சென்றாயனூா், மோட்டூா், தண்ணிதாசனூா், ஒக்கிலிப்பட்டி, கல்வடங்கம், நல்லங்கியூா், செங்கானூா், பொன்னம்பாளையம், கே.மேட்டுப்பாளையம், அ.மேட்டுப்பாளையம், பாலிருச்சம்பாளையம், ஒடசக்கரை, புள்ளாக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் விவசாயிகள் கிணற்று நீா், ஆற்றுநீா், சொட்டு நீா்ப் பாசனங்களை பயன்படுத்தி வெண்டைக்காய்களை அதிக அளவில் சாகுபடி செய்து வந்தனா்.

கடந்த மாதம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 25 வரை விற்பனையானது. இந்நிலையில் அண்மையில் கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினை அடுத்து கேரள வியாபாரிகள் வெண்டைக்காய்களை வாங்கிச்செல்ல வராததால், தற்போது அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ. 6 வரை மட்டுமே உள்ளூா் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனா். விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.