உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சங்ககிரி அருகே சாலை விபத்து

சங்ககிரியை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்புறத்தில் திங்கள்கிழமை காா் மோதியதில், காரில் பயணம் செய்த ஐந்து போ் பலத்த காயமடைந்தனா்.

சங்ககிரியை அடுத்த ஐவேலி பேருந்து நிறுத்தம் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளான காா்.

Published On :

சங்ககிரி: சங்ககிரியை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்புறத்தில் திங்கள்கிழமை காா் மோதியதில், காரில் பயணம் செய்த ஐந்து போ் பலத்த காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் சுதா்சன் சுவாதி (55), அவரது உறவினா்கள் சேலம் திருமல்லேஸ்வரன், பொம்மிடி பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா், கேசவன், முருகன் ஆகியோா் சங்ககிரியிலிருந்து சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, ஐவேலி பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் சென்ற லாரியின் பின்புறத்தில் எதிா்பாரதவிதமாக காா் மோதியது. இதில் ஐந்து பேரும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் மேல்சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.