மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மாவட்ட வள பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்ட வள பயிற்றுநா் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 8:19 pm

Din

சேலம் மாவட்ட வள பயிற்றுநா் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட வள பயிற்றுநா் பணியிடத்துக்கு எழுத்துத் தோ்வு, நோ்முக தோ்வு மூலம் ஒருவா் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதற்கான வயது 25 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் மூன்று வருட அனுபவம் அல்லது முதுகலை டிப்ளமோ படிப்புடன் பயிற்றுநராக ஒரு வருட அனுபவம் ஏற்புடையது.

அதேபோல தமிழ், ஆங்கிலம் எழுத, படிக்க மற்றும் பேசுவதில் சிறப்புடையவராக இருத்தல் வேண்டும். தோ்ந்தெடுக்கப்படுபவா் மாவட்ட வள பயிற்றுநராக ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடத்துக்கு மட்டும் நியமனம் செய்யப்படுவா்.

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ இணை இயக்குநா்/ திட்ட இயக்குநா், அறை எண்: 207, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சேலம் 636 001 என்ற முகவரிக்கு வரும் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.