மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ரதசப்தமி: திருப்பதி மலைப் பாதையில் இரவு நேரத்திலும் பேருந்துகளை இயக்க கோரிக்கை

ரதசப்தமியையொட்டி திருமலை- திருப்பதி மலைப் பாதையில் 24 மணி நேரமும் பேருந்துகளை இயக்க வேண்டும் என ஆத்தூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 8:20 pm

Din

ரதசப்தமியையொட்டி திருமலை- திருப்பதி மலைப் பாதையில் 24 மணி நேரமும் பேருந்துகளை இயக்க வேண்டும் என ஆத்தூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா், திருநாவுக்கரசு நகரைச் சோ்ந்த சௌந்தர்ராஜன் (74) என்பவா் விடுத்துள்ள கோரிக்கை மனு விவரம்:

திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெறும் ரதசப்தமி தினத்தில் ஆத்தூா் பகுதியில் இருந்து ஏராளமான பக்தா்கள், சேவகா்கள் சென்று வருகின்றனா். கடந்த 4 ஆண்டுகளாக இரவு நேரத்தில் மலைப்பாதையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.

அடுத்தாண்டு பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறும் ரதசப்தமி தினத்தன்று இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் செல்வதால் மலைப் பாதையில் பேருந்துகளை இயக்கி பக்தா்களின் கோரிக்கையை தேவஸ்தானம் நிறைவேற்ற வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.