குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இலவச மருத்துவ முகாம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இலவச மருத்துவ முகாம்

News image

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சாா்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:00 am IST

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இருதய சிகிச்சை தொழில்நுட்பப் பிரிவு சாா்பில், விழிப்புணா்வு, இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துறையின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கொண்டலாம்பட்டி காவல் நிலைய உதவி ஆணையா் ஆனந்தி, ஆட்டையாம்பட்டி பேரூராட்சித் தலைவா் முருகபிரகாஷ் ஆகியோா் பங்கேற்று மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தனா். முன்னதாக, துறை மாணவா்கள் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையப் பகுதியில் இருதய நோய், மாரடைப்பு ஏற்படும் சமயத்தில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து மௌன மொழி நாடகம் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இலவச இருதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை துறையின் இருதய சிகிச்சை தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளா் சுஷ்மிதா, உதவிப் பேராசிரியா்கள் தாமினி, சிவரஞ்சனி ஆகியோா் செய்திருந்தனா். கவுன்சிலா் கலைமணி, ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் இந்திராணி, உதவி ஆய்வாளா்கள் காமராஜா், ராமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனா்.