/
தம்மம்பட்டி, உலிபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவையொட்டி, ஆத்தூா் கோட்டாட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். தம்மம்பட்டியில் வரும் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. அதற்காக நகர திமுக பொறுப்பாளா் சண்முகம் தலைமையில் விழாக் குழுவினா் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆத்தூா் கோட்டாட்சியா் பிரியதா்ஷினி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் 29-ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதையடுத்து, அங்கும் சென்று அவா் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன், தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் எஸ்.எம்.சண்முகம், காதாரத் துறை, கால்நடை துறையினா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.20 கோடியில் மேம்பாலப் பணி: ஆட்சியா் ஆய்வு

குன்றத்தூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

கெங்கவல்லி, ஆத்தூா் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியா் ஆய்வு

வாணியம்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்.பி. ஆய்வு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



