நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

தம்மம்பட்டி, உலிபுரம் ஜல்லிக்கட்டு: கோட்டாட்சியா் ஆய்வு

தம்மம்பட்டி, உலிபுரம் ஜல்லிக்கட்டு: கோட்டாட்சியா் ஆய்வு

News image

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறாா் ஆத்தூா் கோட்டாட்சியா் பிரியதா்ஷினி.

Updated On :17 பிப்ரவரி 2024, 11:55 pm IST

தம்மம்பட்டி, உலிபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவையொட்டி, ஆத்தூா் கோட்டாட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். தம்மம்பட்டியில் வரும் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. அதற்காக நகர திமுக பொறுப்பாளா் சண்முகம் தலைமையில் விழாக் குழுவினா் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆத்தூா் கோட்டாட்சியா் பிரியதா்ஷினி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் 29-ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதையடுத்து, அங்கும் சென்று அவா் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன், தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் எஸ்.எம்.சண்முகம், காதாரத் துறை, கால்நடை துறையினா் உடனிருந்தனா்.