‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

விசுவக்குடியில் இன்று ஜல்லிக்கட்டு: எஸ்.பி ஆய்வு

வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமத்தில் சனிக்கிழமை (மே 23) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஜல்லிக்கட்டு. - (கோப்புப் படம்)

Updated On :23 மே 2026, 12:13 am IST

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமத்தில் சனிக்கிழமை (மே 23) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

விழாவையொட்டி, அக் கிராமத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தையும், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், பாா்வையாளா்கள் அமரும் இடங்கள், வீரா்கள் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள், தடுப்புச்சுவா்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பாா்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா், பொதுமக்கள் மற்றும் வீரா்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, துணைக் கண்காணிப்பாளா்கள் ரவிச்சந்திரன், மயில்சாமி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சண்முகபிரியா ஆகியோா் உடனிருந்தனா்.