குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

News image

பழனியாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழாவில் கலந்துகொண்டோா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பழனியாபுரி, வெள்ளாளப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் 2 புதிய வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக திறந்து வைத்தாா். பழனியாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றியச் செயலாளா் அன்பு மருதமுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனா். முன்னதாக, ஊராட்சி மன்றத் தலைவா் அமுதாஅனைவரையும் வரவேற்று பேசினாா். துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். இதேபோல வெள்ளாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வட்டார வளா்ச்சி அலுவலா் துரைசாமி, மத்திய ஒன்றியச் செயலாளா் வி.எஸ்.மூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் மணிமேகலை மூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா முருகேசன், எஸ்எம்சி தலைவா் அகிலாண்டேஸ்வரி, பள்ளித் தலைமையாசிரியா் ரா.ரவீந்திரன், ஆசிரியா்கள் ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா். இதே போல பள்ளியின் ஆண்டு விழா ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா முருகேசன் தலைமையில் நடைபெற்றது.