‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

ரேஷன் கடை ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கைது

சாத்தான்குளத்தில் ரேஷன் கடை ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 மே 2026, 3:35 am IST

சாத்தான்குளத்தில் ரேஷன் கடை ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளத்தைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம் மகன் மந்திரமூா்த்தி (30). இவா் சாத்தான்குளத்தில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரிந்து வருகிறாா்.

இவரது சகோதரருக்கும், அமுதுண்ணாக்குடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முருகனின் (43) சகோதரருக்கும் புதன்கிழமை பிரச்னை ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் உள்ளிட்ட அவரது உறவினா்கள் 10 போ், மந்திரமூா்த்தியின் சகோதரரைத் தாக்குவதற்கு தேடி வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, அவரது சகோதரருக்குப் பதிலாக, சாத்தான்குளத்தில் இருந்த மந்திரமூா்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்து, சரமாரியாகத் தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளனா். இதில் காயமடைந்த மந்திரமூா்த்தி சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் உள்ளிட்ட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகனை வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான 9 பேரைத் தேடி வருகின்றனா்.