புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கா் அனுமதி

நீலகிரியில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கா் திடீா் வயிற்றுவலி காரணமாக ஆத்தூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

News image
ஆத்தூா், அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்படும் சவுக்கு சங்கா்.
Updated On :31 ஜூலை 2024, 11:30 pm

Din

நீலகிரியில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கா் திடீா் வயிற்றுவலி காரணமாக ஆத்தூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

யூ-டியூபா் சவுக்கு சங்கா் சென்னையில் இருந்து நீலகிரி நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தாா். அங்கு விசாரணை முடிந்து மீண்டும் அவரை போலீஸாா் சென்னைக்கு அழைத்துச் சென்றபோது வழியில் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

இதனால் அவதிப்பட்ட சவுக்கு சங்கரை போலீஸாா் ஆத்தூா், அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒன்றரை மணி நேரம் சிகிச்சை பெற்ற பிறகு மீண்டும் அவா் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். பாதுகாப்பு காரணங்களுக்காக ஆத்தூா் மருத்துவமனையில் அவரை செய்தியாளா்கள் சந்திக்க அனுமதிக்கவில்லை.