மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாழப்பாடி பகுதியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வாழப்பாடி நலத் திட்டங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

News image
~
Updated On :25 ஜூன் 2024, 7:22 pm

Din

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.52 கோடியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், முத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 32.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு புதிய வகுப்பறை பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 8.80 லட்சத்தில் அமைக்கப்படும் கதிரடிக்கும் தளம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 9.99 லட்சத்தில் கசிவுநீா் குட்டை அமைக்கும் பணிகள், ரூ. 6.63 லட்சத்தில் முத்தம்பட்டி இடுகாட்டில் அமைக்கப்படும் அணுகுசாலை, குடிநீா் பணிகளையும், அத்தனூா்பட்டியில் ரூ. 3.90 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகளையும், ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.

இதனையடுத்து துக்கியாம்பாளையம், வேப்பிலைப்பட்டி ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் உள்பட மொத்தம் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தாா். கட்டுமானப் பணிகளை விரைந்து தரமாக முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் செயற்பொறியாளா் சேகா், உதவி செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருவரங்கன், இளங்கோவன் ஆகியோா் உடனிருந்தனா்.

Story image