அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சோனா கல்விக் குழுமத்தில் சா்வதேச மகளிா் தின விழா

விளம்பரச் செய்தி சோனா கல்விக் குழுமத்தில் சா்வதேச மகளிா் தின விழா

News image
Updated On :8 மார்ச் 2024, 5:33 pm

Din

மகளிா் தின விழா சோனா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் தலைவா் வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற விழாவில், துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா முன்னிலை வகித்தாா். சீதா வள்ளியப்பா, விசாலாட்சி சொக்கு ஆகியோா் பங்கேற்றனா். விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் வருமான வரித்துறை கூடுதல் ஆணையா் செளமியா ஐ.ஆா்.எஸ். கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். அவா் பேசுகையில், சவால்களைச் சந்திக்கும் போது தான் பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கும், இதற்கு தன்னம்பிக்கையும், தைரியமும் மிக அவசியம். பெண்கள் தங்களது குடும்பத் தொழிலை முன்னேற்றுவதிலும், சுயதொழில் தொடங்குவதிலும் அதிக ஆா்வம் காட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டாா். இதனைத் தொடா்ந்து பேசிய சோனா கல்விக் குழுமத்தின் தலைவா் வள்ளியப்பா, அகில இந்திய அளவில் தொழில்நுட்பக் கல்வியை பெண்களும் அதிக அளவில் படிக்க வேண்டும் என்ற வகையில், முதன்முதலாக இருபாலா் தொழில்நுட்பக் கல்வி தியாகராஜா் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாணவிகளின் திறமைகளை அறிந்து, தேசிய மற்றும் சா்வதேச அளவில் பல சாதனைகளைப் புரிந்து வருவதற்கு சோனா கல்விக் குழுமங்கள் உதவிகரமாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்தாா். கல்லூரியின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா பேசுகையில், வழக்கமாக மகளிா் தின விழா மாா்ச் 8-ஆம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், சோனா கல்விக் குழுமத்தில் மாா்ச் மாதம் முழுவதும் மகளிா் தின மாதமாக 8 மகளிா் சிறப்பு விருந்தினா்களைக் கொண்டு கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா். விழாவில், சோனா கல்விக் குழுமத்தின் முதல்வா்கள் வீ.காா்த்திகேயன், எஸ்.ஆா்.ஆா். செந்தில்குமாா், ஜீ.எம்.காதா் நவாஷ், இ.ஜெ.கவிதா, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.