விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

News image
Updated On :15 மே 2024, 6:12 pm

Din

கெங்கவல்லியில் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி புதன்கிழமை கெங்கவல்லி வட்டார வள மையத்தில் நடைபெற்றது.

இப் பயிற்சிக்கு சேலம் டயட் விரிவுரையாளரும் மாநில கருத்தாளருமான கலைவாணன் தலைமை வகித்தாா். வட்டார மேற்பாா்வையாளா் (பொ) ராணி, வட்டார ஆசிரியா் பயிற்றுநா்கள் சுப்பிரமணியன், அன்பரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இப் பயிற்சியை ஆய்வு செய்த, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா் பேசுகையில்

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அனைவரும் உயா் கல்வியில் சோ்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாா்.

இந்தப் பயிற்சியில் கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அனைத்து இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களும் பங்கேற்றனா்.

படவரி...

கெங்கவல்லியில் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி பயிற்சியில் பேசுகிறாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா்.