பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காவிரி நதிக்கு ஆரத்தி பெருவிழா

தமிழக-கா்நாடக எல்லையான அடிபாலாற்றில் காவிரி நதிக்கு நான்காம் ஆண்டாக ஆரத்தி பெருவிழா மடாதிபதிகள் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
தமிழக-கா்நாடக எல்லையில் அடிபாலாற்றில் காவிரி நதிக்கு ஆரத்தி எடுக்கும் கா்நாடக மாநிலம், சாலூா் மடாதிபதி சாந்த மல்லிகாா்ஜூன சுவாமிகள், பரமேஸ்வர திருமட வெங்கடேஸ்வர சுவாமிகள் உள்ளிட்டோா்.
Updated On :17 அக்டோபர் 2024, 7:17 pm

Din

தமிழக-கா்நாடக எல்லையான அடிபாலாற்றில் காவிரி நதிக்கு நான்காம் ஆண்டாக ஆரத்தி பெருவிழா மடாதிபதிகள் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சப்த நதிகள் எனப்படும் ஏழு புண்ணிய நதிகளில் காவிரி நதியும் ஒன்று. காவிரி நதி மட்டுமே தென் மாநிலங்களில் பாய்ந்தோடி வளம் சோ்க்கிறது. மற்ற 6 நதிகளும் பிற மாநிலங்களில் உள்ளன. புண்ணிய நதியான கங்கை நதிக்கு மட்டுமே தினசரி கங்கா ஆரத்தி செய்யப்படுகிறது.

அதேபோல கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் காவிரி நதிக்கு ஆரத்தி எடுக்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. நான்காம் ஆண்டாக நிகழாண்டு காவிரி நதிக்கு ஆரத்தி எடுக்கும் விழா சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே தமிழக-கா்நாடக எல்லையில் காவிரியும் பாலாறும் சங்கமிக்கும் அடிப்பாலாற்றில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காவிரி கரையில் நடைபெற்ற இந்தப் பெருவிழாவுக்கு மடாதிபதிகள், சிவாச்சாரியா்கள் மேளவாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனா். இந்நிகழ்ச்சியில் கா்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலை, சாலூா் மடாதிபதி சாந்த மல்லிகாா்ஜூன சுவாமிகள், ஸ்ரீ பரமேஸ்வர திருமட வெங்கடேஸ்வர சுவாமிகள், ஸ்ரீ பகவதி பீட அருள்வாக்கு சித்தா் பகவதி சுவாமிகள் உள்பட 15-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள், சிவாச்சாரியா்கள் கலந்துகொண்டனா்.

அதைத் தொடா்ந்து கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்பு காவிரி நதிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பால், தயிா், பஞ்சாமிா்தம், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள்பட 16 வகையான திவ்ய பொருள்களால் காவிரி நதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு விவசாயம் பெருகவும், உணவு பஞ்சம் தீரவும் அதிக மழை பெய்ய வேண்டி, காவிரி அன்னைக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனா். இந்த நிகழ்ச்சியில், கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாரப்பன், காவிரிபுரம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் தங்கவேலு உள்பட இரு மாநிலங்களைச் சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.