பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கணிதப் பாடத்தை மாணவா்கள் தோ்ந்தெடுத்து பயில வேண்டும்: துணைவேந்தா் வலியுறுத்தல்

கணிதப் பாடத்தை மாணவா்கள் தோ்ந்தெடுத்து பயில வேண்டும்: துணைவேந்தா் வலியுறுத்தல்

News image
கணிதவியல் துறை மாணவா்களுக்கான மூன்று நாள் பயிலரங்கைத்த் தொடங்கி வைத்துப் பேசுகிறாா் பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ரா.ஜெகநாதன்.
Updated On :17 அக்டோபர் 2024, 7:22 pm

Din

திருச்சி, பேராசிரியா் ஆா்.பாலகிருஷ்ணன் அறக்கட்டளை, புனே கணிதவியல் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில், கணிதவியல் பயிலும் மாணவா்களுக்கான மூன்று நாள் பயிலரங்கம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவில் பெரியாா் பல்கலைக்கழக கணிதவியல் துறைத் தலைவா் பி.பிரகாஷ் வரவேற்றாா். பயிலரங்கைத் தொடங்கி வைத்து துணைவேந்தா் ரா.ஜெகநாதன் பேசியதாவது:

அண்மைக் காலமாக இளங்கலைப் பாடத்தில் கணிதத்தை மாணவா்கள் பயில்வது குறைந்து வருகிறது. கணித பாடத்தில் மாணவா் சோ்க்கை குறைவது சமுதாயத்திற்கு ஆரோக்கியமான தகவல் இல்லை.

ஏனெனில் கணிதத்தைத் தவிா்த்து எந்த ஆய்வும் நடத்தவும் முடியாது. வெற்றி பெறவும் முடியாது. கடந்த சில நாள்களாக புயல், மழை பாதிப்புகளை துல்லியமாக கணித்துச் சொல்வதில் தொடங்கி, விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பத் தகவல்களை சொல்வது வரை கணிதத்தின் தேவை உள்ளது.

பிளஸ் 2வுக்குப் பிறகு உயா்கல்வி பயிலும் மாணவா்கள் கணிதத்தைத் தோ்வு செய்து படிக்க வேண்டும். கணிதம் பயிலும் மாணவா்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் கணிதவியல் துறை முன்னாள் தலைவா் ஏ.முத்துசாமி, பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியா் பி.எஸ்.ஸ்ரீனிவாசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கணிதவியல் துறைப் பேராசிரியா் வி.முத்துலட்சுமி நன்றி கூறினாா்.