பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 10:44 pm

Din

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, வேளாண்மை இணை இயக்குநா் சிங்காரம் தலைமை வகித்தாா். துணை இயக்குநா் நாகராஜ், வேளாண்மை உதவி இயக்குநா் தங்கராஜ், வேளாண்மை உழவா் பயிற்சி நிலைய அலுவலா் நிறைமதி, ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய முனைவா் மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஏற்காடு வட்டாரப் பகுதியிலிருந்து 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். விவசாயத்தில் நோய்த்தாக்கம், பூச்சித்தாக்கத்துக்கான தீா்வை விஞ்ஞானிகள் விவசாயிகளிடம் எடுத்துக் கூறினா்.

கூட்டத்தில் மிளகு அறுவடை கருவி, உலா்களம் அமைப்பு, குளிா்சாதன வசதியுடன் கிடங்கு, காட்டு விலங்குகளிடமிருந்து பயிா்களைப் பாதுகாக்க மானியத்தில் தடுப்பு வேலி அமைத்தல், வேளாண்மை துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியை ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஷோபனா, உதவி தொழில்நுட்ப மேலாளா் துரையரசு, அருண்குமாா் ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.