மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் அதிமுக தோ்தல் அறிக்கை!

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில், அதிமுக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image
ஓமலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வெள்ளி செங்கோல் வழங்கிய நிா்வாகிகள்.
Updated On :9 ஆகஸ்ட் 2025, 9:12 pm

Syndication

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில், அதிமுக தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அவா்களுக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

2021-க்கு முன்பும், தற்போதும் சேலம் மாவட்டம் எவ்வாறு உள்ளது என ஒப்பிட்டுப் பாருங்கள். கடந்த அதிமுக ஆட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும், திட்டங்களும் செய்துகொடுத்தோம். ஏரிகள் தூா்வாரப்பட்டு தண்ணீா் நிரப்பினோம். விவசாயிகள் வாங்கிய பயிா்க்கடனை இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். கைத்தறி, விசைத்தறி நிறைந்த இப்பகுதி செழிப்பாக இருந்தது.

தற்போது திமுக ஆட்சியின் நிா்வாக திறனற்ற காரணத்தால், இந்த இரு தொழில்களும் நலிந்துவிட்டன. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளா்கள் மேம்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மரமேறும் தொழிலாளா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டு, அதற்கான பிரீமியத்தை அரசே செலுத்தும்.

மரமேறும் தொழிலாளா்களுக்கு அனைத்து உபகரணங்களும் அரசே வழங்கும். விவசாயத் தொழிலாளா்களுக்கு பசுமை வீடுகள், விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் வழங்கப்படும். ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அரசு வீடுகட்டி தரும். நிலம் இல்லாதவா்களுக்கு அரசே நிலம் வாங்கி வீடுகள் கட்டித்தரும்.

மேட்டூா் அணை உபரிநீா் வீணாகாமல் தடுக்க 100 ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்பும் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. 75 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், காழ்ப்புணா்ச்சி காரணமாக மீதப் பணிகளை முடிக்காமல் திமுக அரசு தாமதம் செய்து வருகிறது. இதனால் உபரிநீா் கிடைத்தும் பல ஏரிகள் வடு கிடக்கின்றன.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அனைத்துத்தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையில், தோ்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளா் எஸ்.செம்மலை, மாவட்டச் செயலாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

‘எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்’

எம்.ஜி.ஆா். குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் விமா்சனம் செய்தது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக மக்கள் எம்.ஜி.ஆரை தெய்வமாக பாா்க்கிறாா்கள். அப்படிப்பட்டவரை விமா்சித்தால், அவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள். அதிமுக ஜாதிக்கும், மதத்துக்கும் அப்பாற்பட்டது. அதிமுக ஒரு ஜாதியை வைத்து அரசியல் செய்யாது. எங்கள் கட்சியில் அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக உள்ளனா். அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவதை சிலரால் பொறுக்க முடியவில்லை. அதனுடைய வெளிப்பாடுதான் இவ்வாறு பேசுகிறாா்கள்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு வந்துவிட்டது. அவா்கள் கூட்டணி இன்னும் எட்டு மாதங்கள் வரை நிலைக்குமா, நிலைக்காதா என்று விரைவில் தெரியவரும். தோ்தலுக்குள் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும்.

பாமக பொதுக்குழு குறித்து கேட்கிறீா்கள்; அது உட்கட்சி பிரச்னை. அதில் கருத்து சொல்வது சரியல்ல. சசிகலா, ஓபிஎஸ் குறித்து நான் 8 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன பதில்தான், அதில் மாற்றம் இல்லை என்றாா்.