நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

மேட்டூா் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவோம்: பிரேமலதா விஜயகாந்த்

மேட்டூா் சட்டப்பேரவை தொகுதியை மீண்டும் கைப்பற்றுவோம் என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசினாா்.

News image

பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப் படம்)

Updated On :12 ஆகஸ்ட் 2025, 1:29 am IST

மேட்டூா்: மேட்டூா் சட்டப்பேரவை தொகுதியை மீண்டும் கைப்பற்றுவோம் என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசினாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் சதுரங்காடி பகுதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

மேட்டூா் தொகுதியை 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று கைப்பற்றுவோம். தேமுதிக தலைவா் கண்ட கனவை, லட்சியத்தை நாம் அனைவரும் ஒன்றுசோ்ந்து வென்றெடுப்போம்.

தமிழ்நாடு முழுவதும் இன்னும் பல திட்டங்களை ஆட்சியாளா்கள் நிறைவேற்றவில்லை. சென்னையில் சுகாதாரப் பணியாளா்கள் 16 நாள்களாக போராடி வருகின்றனா். அவா்களை சந்தித்துவிட்டுதான் நான் இங்கு வந்துள்ளேன். மேட்டூா் பேருந்து நிலையத்தில் கட்டடங்களுக்கு வாடகையை உயா்த்தி உள்ளனா். இதனால் பல குடும்பத்தினா் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளது வேதனையாக உள்ளது.

மேட்டூா் அனல்மின் நிலைய தற்காலிக பணியாளா்களை நிரந்தப்படுத்த வேண்டும்.

2026 இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக எந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறதோ, அந்தக் கூட்டணிக்கு வெற்றியைத் தாருங்கள். மேட்டூா் தேமுதிக வெற்றிபெற்ற தொகுதியாகும். எனவே, இந்த தொகுதியை மீண்டும் மீட்டெடுப்போம்.

ஜனவரி மாதம் 9-ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றாா்.