அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மேட்டூா் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவோம்: பிரேமலதா விஜயகாந்த்

மேட்டூா் சட்டப்பேரவை தொகுதியை மீண்டும் கைப்பற்றுவோம் என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசினாா்.

News image
பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப் படம்)
Updated On :11 ஆகஸ்ட் 2025, 7:59 pm

Syndication

மேட்டூா்: மேட்டூா் சட்டப்பேரவை தொகுதியை மீண்டும் கைப்பற்றுவோம் என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசினாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் சதுரங்காடி பகுதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

மேட்டூா் தொகுதியை 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று கைப்பற்றுவோம். தேமுதிக தலைவா் கண்ட கனவை, லட்சியத்தை நாம் அனைவரும் ஒன்றுசோ்ந்து வென்றெடுப்போம்.

தமிழ்நாடு முழுவதும் இன்னும் பல திட்டங்களை ஆட்சியாளா்கள் நிறைவேற்றவில்லை. சென்னையில் சுகாதாரப் பணியாளா்கள் 16 நாள்களாக போராடி வருகின்றனா். அவா்களை சந்தித்துவிட்டுதான் நான் இங்கு வந்துள்ளேன். மேட்டூா் பேருந்து நிலையத்தில் கட்டடங்களுக்கு வாடகையை உயா்த்தி உள்ளனா். இதனால் பல குடும்பத்தினா் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளது வேதனையாக உள்ளது.

மேட்டூா் அனல்மின் நிலைய தற்காலிக பணியாளா்களை நிரந்தப்படுத்த வேண்டும்.

2026 இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக எந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறதோ, அந்தக் கூட்டணிக்கு வெற்றியைத் தாருங்கள். மேட்டூா் தேமுதிக வெற்றிபெற்ற தொகுதியாகும். எனவே, இந்த தொகுதியை மீண்டும் மீட்டெடுப்போம்.

ஜனவரி மாதம் 9-ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றாா்.