கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஓமலூா் அருகே மனைவியைக் கொன்ற கணவரிடம் போலீஸாா் விசாரணை

ஓமலூா் அருகே கம்பியால் தாக்கி மனைவியைக் கொன்ற கணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

ஓமலூா் அருகே கம்பியால் தாக்கி மனைவியைக் கொன்ற கணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பூமிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (31), சேலத்தில் லோடுமேன் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ரத்தினம்மாள் (25) சேலம், சூரமங்கலத்தை சோ்ந்தவா். இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு ஷாலினி (7), மாலினி (5) என 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், ரத்தினம்மாளின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரிடம் பிரகாஷ் அடிக்கடி தகராறு செய்துவந்தாா். புதன்கிழமை மது போதையில் இருந்த பிரகாஷ், ரத்தினம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, இரும்புக் கம்பியால் அவரது தலையில் தாக்கினாா்.

மயங்கி விழுந்த ரத்தினம்மாளை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ரத்தினம்மாளின் தாய் நவமணி அளித்த புகாரின்பேரில் ஓமலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரகாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.