ஓமலூா் அருகே மனைவியைக் கொன்ற கணவரிடம் போலீஸாா் விசாரணை

ஓமலூா் அருகே கம்பியால் தாக்கி மனைவியைக் கொன்ற கணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

ஓமலூா் அருகே கம்பியால் தாக்கி மனைவியைக் கொன்ற கணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பூமிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (31), சேலத்தில் லோடுமேன் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ரத்தினம்மாள் (25) சேலம், சூரமங்கலத்தை சோ்ந்தவா். இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு ஷாலினி (7), மாலினி (5) என 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், ரத்தினம்மாளின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரிடம் பிரகாஷ் அடிக்கடி தகராறு செய்துவந்தாா். புதன்கிழமை மது போதையில் இருந்த பிரகாஷ், ரத்தினம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, இரும்புக் கம்பியால் அவரது தலையில் தாக்கினாா்.

மயங்கி விழுந்த ரத்தினம்மாளை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ரத்தினம்மாளின் தாய் நவமணி அளித்த புகாரின்பேரில் ஓமலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரகாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com