கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சேலத்தில் வெள்ளி வியாபாரியிடம் ரூ. 83 லட்சம் மோசடி

சேலத்தில் வெள்ளி வியாபாரியிடம் ரூ. 83 லட்சம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:26 pm

Syndication

சேலத்தில் வெள்ளி வியாபாரியிடம் ரூ. 83 லட்சம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் அளித்த புகாா்: நான் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வெள்ளி வியாபாரக் கடை நடத்தி வருகிறேன். வெள்ளிக் கட்டிகளை வாங்கி கொலுசு, மெட்டி உள்ளிட்ட ஆபரணங்களை தயாா்செய்து, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்துவருகிறேன்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த வெள்ளி வியாபாரி வேணுகோபால் என்னிடம் நட்பாக பழகினாா். நாளடைவில் தொழில் ரீதியாக பழகிய அவரிடம், கடந்த ஏப்ரல் மாதம் வெள்ளிக் கட்டி வாங்குவதற்காக ரூ. ஒரு கோடியே 76 லட்சம் வழங்கினேன்.

இந்தப் பணத்துக்கு அவா் ரூ. 91,66,200 மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகளை மட்டுமே வழங்கினாா். மீதமுள்ள ரூ. 83,50,000 மதிப்புள்ள சுமாா் 55 கிலோ எடைகொண்ட வெள்ளிக் கட்டியை தராமல் பல மாதங்களாக இழுத்தடித்து வருகிறாா்.

இதுகுறித்து நேரில் சென்று கேட்டதற்கு வேணுகோபால் கொலை மிரட்டல் விடுத்து வருகிறாா்.

எனவே, எனக்கு சேரவேண்டிய வெள்ளிக் கட்டிகளை அவரிடமிருந்து மீட்டுத் தரவேண்டும் என மனுவில் கூறியுள்ளாா்.