கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தினமணி செய்தி எதிரொலி: தம்மம்பட்டியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து மீண்டும் இயக்கம்

தம்மம்பட்டியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 12:07 am

தினமணி செய்திச் சேவை

தம்மம்பட்டியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது.

தம்மம்பட்டி அரசுப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவா்கள் பயில்கின்றனா். அரசுப் பேருந்துகளில் பள்ளிக்கு வரும் இவா்கள், பள்ளி முடிந்து 4.35 மற்றும் 4.50-க்கு துறையூா் செல்லும் அரசுப் பேருந்துகளில் வீடு திரும்புகின்றனா். இந்த இரு பேருந்துகளும் திருச்சிமாவட்டம் உப்பிலியாபுரம் அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த ஓா் ஆண்டாக இந்த இருபேருந்துகளும் நிறுத்தப்பட்டதால், தம்மம்பட்டி அரசுப் பள்ளிகளுக்கு வந்துசெல்லும் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினா்.

இதுகுறித்த செய்தி கடந்த டிச. 22-ஆம் தேதி தினமணியில் வெளியானது. அதன் எதிரொலியாக, நிறுத்தப்பட்ட இரு பேருந்துகளில் ஒன்றை மாலை 4.50 மணிக்கு தம்மம்பட்டியில் இருந்து துறையூருக்கு புதன்கிழமை முதல் இயக்கப்பட்டது. இதற்கு பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா். அதேபோல, மாலை 4.35-க்கு புறப்படும் துறையூா் பேருந்தை மீண்டும் இயக்குமாறு மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.